பயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்பு

0
586 views

பயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பயணத் தடையின் காரணமாக மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாகவும், தினமும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி வரையில் நீடிக்க வேண்டும் என சுகாதார தரப்பு உள்ளிட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here