இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் வியஸ்காந்த் என்பவரின் பெயரே இந்தப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குசல் பெரேரா, திஸார பெரேரா, கெவின் கொத்திகொட, மகேஷ் தீக்சன, விஜயகாந்த் வியஷ்காந்த், துஷ்மந்த சமீர, வனின்ந்து ஹசரங்க, டசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோரின் பெயர்களே இடம்பெற்றுள்ளன.








