வல்வை தீருவில் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிபேரெழுச்சியுடன் நடந்த மாவீரர் நிகழ்வு

0
1,754 views
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்த தீருவில் சதுக்கத்தில் பேரெழுச்சியுடன் மாவீரர் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.வடமராட்சிப் பகுதிமில் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்துவதற்காக தீருவில் குமரப்பா புலேந்திரன் நினைவுச் சதுக்கத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. தீருவில் சதுக்கம் மாவீரர் நிகழ்வுகளுகாக மஞ்சள்  சிவப்பு  கொடிகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுக்ஷிருந்தது.
 மாலை 3 மணி முதல் மாவீரர் நிகழ்விடங்களை நோக்கி மக்கள் ஆயிரக்கணக்காக வந்த வண்ணமிருந்தனர்
சரியாக 6. 05  மணிக்கு  நினைவிடத்தில் அமைதி நிலவ மாவீரர் நினைவுப்பாடல் காதிலே ஒலிங்க முதலாவது ஈகைச்சுடரினை மாவீரர் மேஜர் கிண்ணியின் தாயார் ஏற்ற தொடர்ந்து அங்கே விசேடமாக வைக்கப்பட்ட தீப்பந்தங்களை மாவீரர்களின் பெற்றோர்கள்  உறவினர்கள் ஏற்றி வேத்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
நிகழ்வின் இறுதியில் மாவீரர் நினைவாக தென்ன தேசிக்கன்று மற்றும் மாதுளை போன்ற பயன்தரு மரக்கன்றுகள் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here