மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த வல்வெட்டித்துறை மீனவர் மீட்பு

0
879 views

வல்வெட்டிதுறை கடற்பரப்பிற்கு நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் 10 இற்கும் மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதுடன் இன்று கடல் தொழில் சங்கங்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கை மிகவும் தீவரமாக இடம்பெற்றது.
இந்நிலையில் மீனவர் சென்ற படகின் பெற்றோல் முடிவடைந்த நிலையில் வேறு இடத்தில் கரையொதுங்கியதாகவும் தற்பொழுது அவரை ஸ்ரீலங்கா கடற்படை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை கொண்டை கட்டை பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய வடிவேலு சிறீகாந் என்ற மீனவர் வல்வெட்டிதுறை கடல் பரப்பில் தூண்டில் தொழில் மேற்கொள்ள நேற்றுமுன்தினம் பிற்பகல் படகில் தனியாக சென்ற நிiலையில் காணாமல் போனமை குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here