அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொலைபேசிகளை இலகு முறையில் பெற்றுக் கொள்வதற்கான சலுகைக்கடன் திட்டமொன்று அமுல்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் இதற்காக அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தற்கால கொரோனாதொற்று இடர்கால நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துளளார்.






