கிணற்றுக்குள் விழுந்த யானை பாதுகாப்பாக மீட்பு

0
531 views

பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று கிராமவாசி ஒருவரின் கிணற்றில் விழுந்தது.

கிணற்றிலிருந்து வெளியேற முடியாமல் யானை தத்தளித்ததை அவதானித்த கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து,

வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்த யானையை மீட்டு வனப்பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 2.45 மணி வரையான நீண்ட போராட்டத்தின் பின் யானை கிணற்றில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here