யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் கணினிகள் அன்பளிப்பு
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தினால் கணினிகள் அதற்கான மேசைகள், கதிரைகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை வல்வை நலன்புரிச்சங்கத்தின் சார்பில் திரு.முரளிதரன் அவர்களால் பாடசாலையின் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. வல்வை நலன்புரிச்சங்கத்தின் இச் செயற்பாட்டின் மூலம் பாடசாலையின் கணினிக்கூடம் விரிவாக்கப்பட்டு வளமாக்கப்பட்டதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு மிகவும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.




















