வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட எறிபந்தாட்டத்தில் 20 வயது பெண்களுக்கான எறிபந்தில் இவ்வருடச் சம்பியனாகியது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி.

குறித்த போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் 20 வயது பெண்களுக்கான இறுதியாட்டத்தில் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் மகா வித்தியாலமும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின.மூன்று செற்களைக் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 25:15 25:22 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 நேர் செற் கணக்கில் வென்று சம்பியனாகியது யூனியன் கல்லூரி.
இதில் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணி பெற்றது.








