சென்னை அணி ‘திரில்’ வெற்றி: கடைசி பந்தில் வீழ்ந்தது

0
530 views

சென்னை: எட்டாவது ஐ.பி.எல், தொடரை வெற்றிகரமாக துவக்கியது சென்னை அணி. டில்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது சென்னை. கடைசி பந்து வரை போராடிய மார்கல், போராட்டம் வீணானது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல், தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னைஇ டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
ரெய்னா ஏமாற்றம்: சென்னை அணிக்கு வழக்கம் போல பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் ஜோடி துவக்கம் கொடுத்தது. இம்முறை டில்லி அணிக்காக களமிறங்கிய ஆல்பி மார்கல் வீசிய முதல் ஓவரில்இ ஸ்மித் 3 பவுண்டரிகள் விளாசினார்.
கூல்டர் நைல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மெக்கலம் (4), அடுத்த பந்திலேயே அவுட்டானார். ‘புது மாப்ளே’ ரெய்னா (4) வந்த வேகத்தில் ‘போல்டான’ போதும், சென்னை அணி 6 ஓவரில் 59ஃ2 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த ஸ்மித் (34), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார்.  குறைந்த ரன்வேகம்: 24 பந்தில் 32 ரன்கள் எடுத்த டுபிளசி அவுட்டான பின் சென்னை அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. ஜடேஜா 18, பிராவோ 1 ரன்னுக்கு அவுட்டாக, சென்னை அணி 120 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
துவக்கத்தில் பந்துகளை வீணடித்த கேப்டன் தோனி (30), கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. மோகித் சர்மா (2), அஷ்வின் (12) அவுட்டாகாமல் இருந்தனர். சபாஷ் நெஹ்ரா: எளிதான இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு நெஹ்ரா சிக்கல் கொடுத்தார். இவரது 2வது ஓவரில் கவுதம் (4), அகர்வால் (15) என, இருவரும் அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய நெஹ்ரா, ஸ்ரேயாசையும் (7) அவுட்டாக்க, டில்லி அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மார்கல் அரைசதம்: கேதர் ஜாதவ் (20) ஏமாற்றஇ ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங், 9 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். டுமினியும் (5), கூல்டர் நைல் (5). அமித் மிஸ்ரா (4) என, வரிசையாக அவுட்டாக சென்னை அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
‘திரில்’ வெற்றி: டில்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுத்தார் மார்கல். அடுத்த பந்தில் இம்ரான் தாகிர் (2) அவுட்டானார்.  4வது பந்தில் சிக்சர் விளாசிய மார்கல், அடுத்த பந்தில் 2 ரன் எடுக்க ‘டென்ஷன்’ அதிகரித்தது. கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மார்கல், பவுண்டரி மட்டும் அடிக்கஇ சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.  டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து போராடி வீழ்ந்தது. மார்கல் (73 ரன், 55 பந்து), ஜோசப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் 2011 உலக கோப்பை தொடருக்காக கட்டப்பட்ட புதிய காலரிகள் குறித்த சர்ச்சை இன்னும் முடியவில்லை. எட்டாவது தொடரில் சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளின் போதுஇ இந்த மூன்று காலரிகள் காலியாக இருக்கும்.  இதனால், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 750 என்ற அடிப்படையில்இ ஒரு போட்டிக்கு டிக்கெட் வருமானம் ரூ. 1.5 கோடி என, மொத்தம் 7 போட்டிகளுக்கு ரூ. 10 கோடிக்கும் மேல் சென்னை அணிக்கு இழப்பு ஏற்படுமாம்
‘நம்பர்-1’ கேப்டன்

கடந்த 2008ல் முதல் ஐ.பி.எல், தொடர் துவங்கியது. அப்போது முதல் தற்போதைய எட்டாவது தொடர் வரை சென்னை அணிக்கு தோனி தொடர்ந்து கேப்டனாக உள்ளார். மற்ற எந்த அணிக்கும் ஒரே கேப்டன் தொடர்ந்து இருந்தது கிடையாது.

நேற்று டில்லி வீரர் மார்னே மார்கல் வீசிய முதல் ஓவரில் ஸ்மித்தின் 3 பவுண்டரி உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்தது சென்னை அணி. ஐ.பி.எல்., வரலாற்றில் சென்னை அணி முதல் ஓவரில் இவ்வளவு ரன்கள் எடுத்தது இது தான் முதன் முறை.

நேற்று 268வது போட்டியில் களமிறங்கிய ஆல்பி மார்கல் (டில்லி). உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அதிக ‘டுவென்டி-20’ போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தில் மும்பை வீரர் போலார்டு (267) உள்ளார்.

நேற்று அகர்வாலை ‘கேட்ச்’ செய்த தோனிஇ ஐ.பி.எல், அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில், கில்கிறிஸ்ட் சாதனையை (67) சமன் செய்தார்.
டில்லி அணியின் தேர்வு நேற்று வியப்பை ஏற்படுத்தியது. அனுபவ ஜாகிர் கான், உலக கோப்பை தொடரில் அசத்திய முகமது ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்கவில்லை.
யுவராஜ் சிங்கை பேட்டிங் ஆர்டரில் பின் வரிசையில் களமிறக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here