விபத்துக்குள்ளான “MT New Diamond” கப்பலை ஸ்ரீலங்கா கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்க கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தீர்மானித்துள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார்.








