உடுப்பிட்டி அ.மி கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் சு.கிருஸ்ணகுமாரின் பணிநயப்பு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெறவுள்ளது.
கல்லூரி பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் க.தர்மதேவன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை ஆசிரியை திருமதி வாசுகியும் ஆசியுரைகளை வல்வை முத்துமாரியம்மன் பிரதம குரு சிவஸ்ரீ தண்டாயுதபாணிகதேசிகர், உடுப்பிட்டி தென்னிந்தியதிருச்சபை பங்குத்தந்தை செ.துரைத்தினம் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.










