தொடர் தொழிற்சங்க போராட்டம் தற்காலிக இடைநிறுத்தம்!

0
930 views

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019 இலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் தொழிற்சங்க போராட்டமானது 11.10.2019 நேற்று வெள்ளிக்கிழமை மாலை உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரின் கூட்டுக் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து மூலமான கடிதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை (14.10.2019) அவ்வவ் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விளக்கப் பொதுக்கூட்டத்தின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், யாழ் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப முன்றலில் 14.10.2019 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் விளக்கப் பொதுக்கூட்டத்தின் பின்னர் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக குறித்த நேரங்களிற்கு கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத்திரும்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here