வல்வை நகரசபை வரவு செலவுத் திட்டம் மீண்டும் இன்று தோல்வியடைந்துள்ளது.
நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராசா அவர்கள் கொரொனா தொற்றுக் காரணமாக காலமானதையடுத்து, 2 மாதங்கள் முன்பு இடம்பெற்ற இடைத் தேர்தலில் சுஜேட்சைக் குழுத் தலைவர் திரு.செல்வேந்திரா அவர்கள் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரான திரு.ஞானேந்திரனின் ஆதராவால் தவிசாளாராகத் தெரிவானார்.
ஆனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் திட்டம் தோல்வியடைந்ததன் மூலம் மீண்டும் கூட்டமைப்பு நகரசபை தவிசாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன.
உபதவிசாளரா் ஞானேந்திரன் அவர்களை கூட்டமைப்பு தவிசாளர் போட்டிக்கு களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









