நாடளாவிய ரீதியில், 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில், இலங்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து நாளையும் மறுதினமும் நாடளாவிய பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கு ஆதரவாக பருத்தித்துறை கோட்ட அதிபர் சங்கமும் பங்கு கொள்வதாக அறிவித்திருக்கின்றனர். இத்துடன் 33 பாடசாலைகளின் அதிபர்கள் கையொப்பமிட்ட ஆதரவுக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வல்வெட்டித்துறையின் பாடசாலை அதிபர்களும் கையொப்பமிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.









