பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்

0
609 views

100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை தயாரிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே சாத்தியமாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றுநடைபெற்ற (03) செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சில் பாடசாலை சுகாதார பிரிவு உண்டு. இதேபோன்று பொது மக்கள் சுகாதார சேவைகள் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் இருக்கின்றார். இவர்களுடன் கல்வி அமைச்சு தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here