வட மாகாணம் முழுவதும் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் மூடப்படும் என வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.வடமாகாணத்தில் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நேற்றைய தினம் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.








