தொண்டைமானாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்கரை பகுதி மக்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
“புரேவி” புயல் இன்று இலங்கையினை ஊடறுத்து கடந்து செல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.மேலும் இது கடந்து செல்லும் பயணப்பாதை முல்லைத்தீவு தொடக்கம் மட்டக்களப்பு வரை எனவும் வானிலை ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே குறித்த கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.








