மண்டைதீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் மழைநீர் சேகரிக்கும் குன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது 7), சார்வின்( வயது 5) ஆகிய சிறுவர்கள் இருவருமே மழைநீர் சேகரிக்கும் குன்றுக்குள் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சிறுவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மண்டைதீவு பொலிசார் அறிவித்துள்ளனர்.








