கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்கள் விளையாட்டு விழா தொடர்பாக இதுவரை ஒப்படைக்காத ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு கரவெட்டிப்பிரதேச செயலர் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
வருடாந்த விளையாட்டு விழா இம்மாத இறுதிப்பகுதியில் நடத்தப்படவுள்ளது. எனவே கழகங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களை உரிய முறைப்படி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்தோடு சகல கழகங்களும் தமது நிதி நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தி, வருடாந்த பொதுக்கூட்டங்களை எதிர்வரும் டிசம்பர் 15 திகதிக்கு முன்னர் நடத்தி அதன் அறிக்கையை தமக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளளார்.







