வல்வெட்டித்துறை தபாலகத்தின் தபாலதிபராக கடமையாற்றிய அ.அருளானந்தசோதி அவர்கள் பதவியுயர்வுடன் பருத்தித்துறை தபாலகத்தின் பொறுப்பு தபாலதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் வல்வெட்டித்துறை தபாலகத்தின் தபாலதிபராக கடையாற்றிய இவர் முதலாம் தர அஞ்ச அதிபராக பதவி உயர்த்தப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை முதல் பருத்தித்துறை தபாலகத்தின் பொறுப்பு தபாலதிபராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
பருத்தித்துறை கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளராக பணியாற்றும் அருளானந்த சோதி அவர்கள் இலங்கை காப்பந்தாட்ச் சம்மேளனத்தின் பிரதீப பொதுச் செயலாளராக (நிர்வாகம்)பணியாற்றி வருவதும் குறிப்பித்தக்கது.









