உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி 40லட்சத்து 36ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 161 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 460 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்:-
அமெரிக்கா – 78,622
இங்கிலாந்து – 31,241
இத்தாலி – 30,201
ஸ்பெயின் – 26,478
பிரான்ஸ் – 26,230







