யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் சிவதீபம் 2 மலர் வெளியீட்டு நிகழ்வு 01.10.2019 செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணிக்கு வித்தியாசாலையின் தையல் பாகர் அரங்கில் முன்னாள் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந் நூலின் வெளியீட்டுரையை ஆசிரியர் திரு.மா.செ.வதாஸ் அவர்களும் நயப்புரையை ஆசிரியர் திரு.அஜந்தகுமார் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர். மலரின் முதற்பிரதியை பாடசாலையின் ஓய்வு நிலை முன்னாள் அதிபர் தி.ஆ.சிவநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நூல் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

































































