பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து சுவாரசியமாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மௌசு குறைந்துவிட்டது.
கமல் எவ்வளவோ சொல்லியும் ஓவியா போட்டியில் பங்கேற்க மறுத்தார், இதனால், பிக்பாஸ் TRP பாதியாக குறைந்தது. இதனால், ஓவியாவிற்கு போட்டியாக TRP ஏற்ற முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.
அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓவியாவே மீண்டும் கொண்டுவர ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஓவியா அவரது தோழி வீட்டில் இருந்து அவர் மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மன அழுத்தத்தில் இருந்து வெளியேற அவ்வப்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு. பார்ப்போமே ஆகஸ்ட் 15-ம் தேதி வரப்போவது யார் என்று.