பெண்களுக்கான பூப்பந்து வல்வை அணி இரண்டாமிடம்

0
577 views

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி இன்றைய தினம் சிவகுரு வித்தியாசாலை மைதானத்தில் நடைபெற்றது.முதலாவது ஆட்டத்தில் நெடியகாடு வி.கழகத்தை எதிர்த்து வல்வை வி.கழகம் களமிறங்கியது.இதில் வல்வை வி.கழகம் 2:0என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்துக்கு நுழைந்தது. அரையிறுதி ஆட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து செந்தோமஸ் வி.கழகம் களமிறங்கியது.இதில் வல்வை வி.கழகம் 2:0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் ஐக்கியம் வி.கழகத்தை சந்தித்தது.விறு விறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் வல்வை அணி 0:2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இச் சுற்றுத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற வல்வை அணியை வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here