குடும்பப்பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு பரத்தித்துறை மாவட்ட நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றிற்குச் சென்று விட்டு தாயாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த கம்பர்மலைப ;பகுதியைச் சேர்ந்த குடும்பப்ட பெண்ணை வெள்ளை வானில் வந்த கும்பல் ஒன்று கடந்த புதன்கிழமை கடத்தியது.இக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்திருந்தனர் .அவர்களை இன்று பருத்தித்துறை நீதிமன்னில் நீதிபதி முன் ஆஜர்செய்யப்பட்டனர். ஆவர்கiளின் கணவனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியயலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீவிவான் ஏனைய சந்சேக நபர்களை அடையாளம் காணும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.