யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழித்தமைக்கு கண்டித்து வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்புக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து வடமராட்சியிலுள்ள வர்த்ததக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அரச போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்றபோதும் தனியார் போக்குவரத்துச் சேவை இடம்பெறவில்லை. அரச திணைக்களங்கள் திறந்திருந்த போதும் மக்கள் வரவு அதிகமாகக் காணப்படவில்லை.















