வடமராட்சி வலய உடற்கல்வி பிரிவினரால் தரம் 10 மாணவர்களுக்கான சுயகற்றல்
கையேடு நேற்று வெளியிடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட கொரானா அனர்த்தம் காரணமாக இழந்த கல்வியை மீளப்பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு வடமராட்சி வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ச.செல்வக்குமரனின் வழிகாட்டலில் வலய உடற்கல்வி ஆசிரியர் குழாமால் இந்த சுயகற்றல் கையேடு தயாரிக்கப்பட்டது.
உதவிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் பருத்தித்துறை கோட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் முதல் பிரதியை பருத்தித்துறை கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம் .நவநீதமணி வெளியீட்டு வைத்தார்.
இதில் வடமராட்சி வலயத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.











