ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் அண்மையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்புச் செய்தனர்.
தரம் 11 இல் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரொன்ரோ புளுஸ் பவுண்டேசனின் வல்வைப் பிரதிநிதி திரு இ.சுரேன், இணைப்பாளர் த.சி.ஜெயப்பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா ரொரன்ரோ புளுஸ் அமைப்பினர் முன்னரும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமையைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.










