கண்ணீர் அஞ்சலிகள்
முத்துக்குமார் அம்பிகை மகன் தங்கவேல்
வாள் கொண்டு கரை காத்த வல்வெட்டித்துறையம்பதியில்
வயலுரான் பெயர் கொண்டு வாழ்ந்தண்ணா
வல்வையரின்வாசம் பரப்ப பல்லாண்டு பணி செய்தாய்
வல்வையரின் வரலாற்றை ஜம்பதாண்டு காலம்
அழகாக வரைந்து வைத்தாய்
குச்சத்தில் மாடு வளர்த்து புனிதம் கண்ட குடும்பமது
அம்பாளின் காப்புடன் கைலாசம் சென்றவரே
முப்பத்தெட்டு கோயில் கொண்ட வல்வையம்பதியில்
நீங்கள் பாடிவைத்த பக்திப்பாடலகள் மனம் குளிரும்
சிதம்பாராவின் சாரணியத்தில்; துடிப்பான சாரணியன் நீங்கள்
சிதம்பரா மூன்று தடவைகள் அகில இலங்கையில் வென்று
பெற்றிக்கேடயம் பெற்ற வரலாற்றுக் காலத்தவர்
சிதம்பராவின் கால் கை பந்தாட்டங்களின் வெற்றிகள்
பெருமைகள் கொண்டது உங்களாலும்தான்
வரலாற்று பதிவாக நீலத்தார் பொண்விழா மலரில் பறைந்து வைத்தோம்
குச்சத்துக்குள் குறுகி நின்ற சைனிங்ஸ்சை பலருடன் பகிர்ந்தவன்
சைனிங்ஸ் அன்றும் இன்றும் நாளையும் பெறும் வெற்றிகளுக்கு வித்தானவன்
வாணிபடிப்பகத்தின் மேல் உள் அக்கறையில் அக்கறை கொண்டவர்
சிதம்பராவின் கலைஅரங்கில் நீங்கள் நடித்த நாடகம்
அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பலகாலம் ஊர் மனதில் பதிந்தது.
ஆயிரத்து நூறு மாவீருர்கள் விதையாகி வல்வைமண்ணின்
ஒரு மாவீரன் தந்த மாதந்தை நீங்கள்
வல்வையூர் கோயிலெல்லாம் பாடி திரிந்த மாபக்த்தன் நீங்கள்
வாழ்நாள் சாதiனைகள் பெற்ற வல்வையின் வரலாறு நீங்கள்
பிள்ளைச்செல்வங்களால் சிறப்பான வாழ்வியிலில்
எளிமை நேர்மை உண்மையுடன் வாழ்ந் வல்வையின்
புனிதர்;களில் நீங்களும் ஒருவர்;
நாலு பேர் மதிக்க வாழ்ந்தால் போது என்ற சமுதாயத்தில்
ஊரின் நாலு தலைமுறை மதிக்க வாழ்ந்த உத்தமர் நீங்கள
ஊரே இன்று கலங்கி நிற்பது நீங்கள் வாழ்ந்த வாழ்வு சரியானது.
ஊரின் இளைய சமுதாயத்துக்கு அன்பான வேண்டுகோள்
ஒரு வருடத்துக்குள் தங்கமண்ணா பெயரில் வல்வையம்பதியில்
ஆயிரம் புனித விருட்ச்சங்களை நடுங்கள் வல்வையூர் புனிதம்பெறும்
காலையும் மாலையும் சூரியஉதயம் அஸ்தமனம் கானும் புனித ஊர்நாங்கள்
கடலோரம் தங்கமண்ணா நடப்போர் சங்கம் அமையுங்கள்
வல்வையரின் வாழ்வியல் வெற்றிகளை அன்றே நிதர்சனம் செய்யுங்கள்
கைலாசத்தில் கலந்து உறைந்த தங்கமண்ணாவை வணங்குகின்றோம்.
புலம்பெயர்ந்த குச்சம் காமாழை வாசிகள்
குச்சம் குட்டித்துரை







