முழுமதியாய்
காலைப் பொழுதுதான் மலர கவிதையாய் நாம் கண்டோம்.
வல்வை செய்திகள் இணையத்தளத்தை கண்டோம்.எம் முகம் மலர்ந்தது முகப்போ முழுமதியாய்.எப்போது பிறந்தது ?கேள்விகள் தாம் தொடுக்க ,தீபாவளித்திருநாளில் என்றனர்.
முகப்போ முழுமதி என்றால் அதற்கு தோரணம் வைத்தது போல் வண்ண விளம்பரங்கள் மாலையானது.வல்வையில் பல இணையத்தளங்கள் .மகிழ்ச்சி ஆனால் பெருமகிழ்ச்சி மீண்டும் வல்வை செய்திகள் இணையத்தளம் (www.valvainews.org). சிவனும் அம்பாளும் ஆசி வழங்க கூடவே எம் பெருமான் கப்பலுடையவரும் மற்றும் ஊரிலுள்ள அனைத்து தெய்வங்களும் ஆசிவழங்க வல்வைக்கே உரித்தான கம்பீரம் இணையத் தளத்தின் முகப்பினூடே நாம் கண்டோம்.
வாழ்த்துக்கள் கூறுவது மட்டுமல்லாது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.வாழிய உங்கள் பணி தொடரட்டும்.பக்கசார்பற்ற விடயங்கள்,உண்மை விடயங்கள்,நல்ல விடயங்கள் ,பயன் தரும் மருத்துவக்குறிப்புகள் அதுமட்டுமல்ல உடனுக்குடன் செய்திகளை வழங்குவதன் மூலம் வல்வை செய்திகள் இணையத்தளம் முன் மாதிரியாய் இருக்க வேண்டும்.மற்றும் பொது நலத்துடன் இந்த வேலையை செய்வதன் மூலம் சிறந்த அபிமானத்தைப் பெற முடியும்.இன்றுவரை பார்த்ததில் மிக மிக சிறப்பாக உள்ளது.மென் மேலும் உங்கள் பணி தொடரவும் இந்த வல்வை செய்திகள் இணையத்தளத்தை ஆரம்பித்த அனைவருக்கும் இதை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .வாழ்க வளமுடன்.
வாழ்த்து கூறும் நாம் ,
வல்வை சுந்தரி கலா மன்றத்தின்
சுந்தரி கார்த்திகேசன் .
வல்வை சுந்தரி கலா மன்றத்தை பற்றி
கப்பலுடையவர் துணை
வல்வை சுந்தரி கலா மன்றம்
10.11.2014
யார் இந்த சுந்தரி கலாமன்றம் ?
எப்போது,எப்படி,எங்கே ?
என்ற கேள்விகள் பலருக்கு தோன்றும்.எனவே நாம் யார் என்பதைப்பற்றியும்,நாம் என்ன செய்தோம் என்பதைப்பற்றியும் நாம் சொன்னால் தான் புரியும்.

வல்வை மண்ணில் பல நாடக மன்றங்கள்,பல நாடகங்கள் பார்த்தோம் ரசித்தோம் என்று போகாமல் சிறு வயது முதலே நாடகத்தின் மேல் கொண்ட ஆர்வம் இலை மறை காயாக எமக்குள் ஒளிந்திருந்தது.காலம் காலமாய் வல்வை உதயசூரியன் கழக விளையாட்டுப்போட்டிகளில் நடாகப்போட்டிகளும் நடக்கும் .பல ஊர்களிலிருந்தும் பல நாடகங்கள் போட்டிக்கு வரும்.அதில் தெரிவு செய்யப்பட்டு போட்டியில் பங்கு பற்றி பரிசில்களும் பெற்று செல்லும்.சிறு வயது முதல் தேங்கியிருந்த நடிப்பாசை மென் மேலும் கூடியது.அது மட்டுமல்லாது எமது தந்தையும் ஒரு சிறந்த நாடக நடிகர்,சிறந்த உடுக்கு வாத்திய கலைஞர் ,அது மட்டுமல்லாது சிறந்த கார் ஓட்டுனர்.உதயசூரியன் கழக விளையாட்டுப்போட்டியில் கார் ஓட்டுனர்கள் எல்லோரும் பங்கு பற்றுவார்கள்.அதில் எம் தந்தையின் சிறப்பான பங்கையும் நாம் கண்டோம்.பாடசாலையில் படிக்கும் காலங்களில் நாடகங்களில் நடித்த அனுபவம் இவை எல்லாம் நாடக ஆர்வத்தை கூட்டியது.காலமும் பல வருடங்கள் கடந்தன.கல் பாதை,முள் பாதை ,தந்தையின் பிரிவு மீண்டும் வருடங்கள் ஓடின.
அப்போது தான் 1994 ம் ஆண்டளவில் வல்வை விக்னேஸ்வரா வாசிகசாலையால் நடாத்தப்படும் பாலர் பாடசாலையின் விளையாட்டுப்போட்டியும்,நாடக விழாவும் வைப்பதாக அறிவித்தல் போட்டிருந்தார்கள்.நாமும் இந்த சந்தர்ப்பத்தில் நாடகம் போட முடிவெடுத்தோம்.எம் அன்னையின் ஆசியும் நாடக கலைஞரான எமது தந்தையின் செல்லப்பெயரில்(சுந்தரி அண்ணா )என்று எல்லோரும் அழைப்பார்கள்.ஆகவே எமது சுந்தரி கலாமன்றத்தை உருவாக்கி ,எமது வல்வை உதயசூரியன் இளங் கலைஞர்களுடன் எமது முதல் நாடகமான ‘மலரத்துடிக்கும் அரும்புகள்’ என்பதை மேடை ஏற்றினோம்.அதற்கு அன்றைய விக்னேஸ்வரா வாசிகசாலை நிர்வாகத்தினருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.பல நாடகங்களை மேடை ஏற்றிய உல்லாசக் கடற்கரையில் எமக்கு தெரிந்த வகையில் எமது மன்றம்,எமது வல்வை உதயசூரியன் இளம் கலைஞர்களும் முதல் தடவையாக மேடையேறியதும் பெரு மகிழ்ச்சி .
இந்த நாடகத்தை தொடர்ந்து எமது கலைஞர்களுடன்
“இருவிழிகள்”
“வாடாத மலர்கள்”.
என்ற மேலும் இரு நாடகங்களை மேடை ஏற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றோம்.
காலத்தின் மாற்றம் சந்தர்ப்பம் சூழ்நிலை எம்மால் மேலும் தொடர முடியாமல் இலை மறை காயானோம்
வாழ்க வளர்க.
மலரத்துடிக்கும் அரும்புகள் நாடகத்திலிருந்து …
நடிகர்கள் – கார்த்திகேசன் ,ஆனந்தசிகாமணி (வெள்ளைக்குட்டி),தமிழ்ச்செல்வன் (தமிழன்),நவஜீவன்(கட்டி) ,செல்வபுலேந்திரன் (வெள்ளை).





இருவிழிகள் நாடகத்திலிருந்து …
நடிகர்கள் – கார்த்திகேசன் ,ஆனந்தசிகாமணி (வெள்ளைக்குட்டி),தமிழ்ச்செல்வன் (தமிழன்),நவஜீவன்(கட்டி) ,செல்வகுலேந்திரன் (வெள்ளை),சிவா ,அநபாயன்,இளங்கோ,சைலஜா,சிவஅன்பு (துரை),செந்தில் ,இராசசேகரம்(குட்டித்தம்பி),கண்ணன்.







