கொவிட்19 தடுப்பூசி வல்வை மகளிர் பாடசாலையில் தற்பொழுது ஏற்றப்படுகிறது 03.09.2021.
நேற்றைய தினம் 02.09.2021 யா வல்வை சிதம்பரா கல்லூரி பாடசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்ட பொழுது மக்கள் சமூக இடைவெளியைப் பேணாமல் மிகவும் நெரிசலாக இருந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே இம்முறை மக்கள் அவதானமாக செயற்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.







