நியுஸிலாந்தின் ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதல் நடாத்திய இலங்கையர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.








