கொழும்பை அண்டிய கடற்கரைகளில் மீன்கள் , ஆமைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கி வருகின்ற நிலையில் இவ்வாறு கடற்பிரதேசங்களில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








