முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி.ராதாதேவி ஜெயமனோகர்
அன்னை மடியில் : 25.08.1962 அம்பிகை அடியில் : 19.02.2020
ஆண்டு ஒன்று போனதம்மா உன்
அழியா நினைவில் அபலைகள் நாம் !
நீங்கா உன் நினைவில் நின் சொந்தங்கள்
நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறுதில்லையம்மா !!
எதிர்வரும் 09.03.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 11.30 மணிக்கு
எம் இல்லத்தில் நடைபெறும்எம் இதயதெய்வம்
ராதாதேவி ஜெயமனோகர் அவர்களின்
முதலாம் ஆண்டு ஆன்ம சாந்திக் கிரியைகளில் பங்கேற்று
அவரது ஆன்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தனை செய்யுமாறும்
அதன்பின் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் பங்கேற்குமாறும்
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
கணவர் : செ.ஜெயமனோகர்
மகள்கள் : மதுரா, ரூபிகா
மகன் : பிரசாந்
மல்லிஓடை,
தூபியடி, தீருவில்,
வல்வெட்டித்துறை.









