வங்காள விரிகுடாவில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் தொடக்கம் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. திருகோணமலையிலிருந்து நேற்று முல்லைத்தீவு கரையை அடைந்து முல்லைத்தீவிலிருந்து இலங்கையை ஊடறுத்து மன்னார் நோக்கி பயணித்த புரேவி புயலினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான அசாதரண சூழ்நிலையின் போது நேற்று நண்பகலிலிருந்து வல்வெட்டித்துறையிலும் பலத்த சேதங்கள் நிகழ்ந்துள்ளன.
புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்
































































