வடமராட்சி முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணம் செய்வோரை முகக்கவசம் அணியுமாறு பொலீஸாரும் இராணுவத்தினரும் வழிப்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் கொரோனாவின் 3ஆம் கட்ட அலை விரைவாக பரவலடைந்து வருகின்றது. இந்நிலையில் அனைவரையும் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல முக்கிய வீதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அவ்வீதி வழியால் முகக்கவசம் அணியாது செல்வோரை மறித்து முகக்கவத்தை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருவதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.








