காணாமல் போயிருந்த பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

0
814 views

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் இன்று காலை தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினரான செந்துாரன் நேற்று இரவு முதல் காணமல் போயிருந்தார்.

இவரின் மோட்டார் வாகனம் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு தொண்டைமானாறு பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here