நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட் மக்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதான குருக்கள் திரு.தண்டாயுதபாணிதேசிகர் அவர்களின் புத்திரர் திரு. மாதவன் அவர்களால்
30.3.2020 திங்கள்கிழமை
வல்வை ஆதிகோவிலடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவிலடி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்படவுள்ளது.
31.03.2020 செவ்வாய்கிழமை
வல்வை மானாங்கானை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் தற்பொழுது பல கோயில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி பகுதியில் வாழும் ஜயர்மார்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படவுள்ளதாக திரு. மாதவன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo K.P anna









