மரண அறிவித்தல் செல்வி சிவகணேசன் சரண்யா

0
774 views

மரண அறிவித்தல்

செல்வி சிவகணேசன் சரண்யா

யாழ். வல்வெட்டித்துறை, நெடியகாடு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகணேஷ் சரண்யா அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், சிவகணேஷ் (சிவாஜி)- சுகந்தா தேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்

கிருசன் அவர்களின் அன்புத் தமக்கையும்,

காலஞ்சென்ற கோபாலவடிவேல் மற்றும் தங்கக்கிளி, காலஞ்சென்ற சந்திரசேகரம் (துரை மாமா) மற்றும் பரமேஸ்வரி அவர்களின் அன்புப் பேத்தியும்,

பாபு, பாலாஜி, ராஜீ, ஜெகதீஸ்வரி, சந்திரகலா ஆகியோரின் பாசமிகு பெறா மகளும்,

சூரியகுமார், அன்னராணி, செல்வராணி, ராதா ஆகியோரின் செல்ல மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (18-11-2019) திங்கள் கிழமை மாலை 4:30 மணியளவில், அன்னாரின் இல்லத்தில் இருந்து ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here