வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகியது உடுப்பிட்டி அ.மி கல்லூரி.
குறித்த போட்டியின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் இடம்பெற்றது. இவ்விறுதியாட்டத்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் மோதின. மூன்று செற்களைக்கொண்ட இப்போட்டியில் அபாரமாக விளையாடிய உடுப்பிட்டி அ.மி கல்லூரி 21:15, 21:17 என்றபுள்ளிகளைப்பெற்று 2:0 என்றநேர் செற்றி ல் வெற்றி பெற்று இவ்ருடச்சம்பியனாகியது.
இதில் மூன்றாமிடத்தை கரவெட்டி விக்னேஸ்வராக்கல்லூரி பெற்றுக்கொண்டது.








