
வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றதன. இவ்விறுதியாட்டத்தில் பருத்தித்துறைமெதடிஸ்த பெண்கள் கல்லூரியும் வல்வை மகளிர் கல்லூரியும் மோதின. மூன்று செற் கொண்ட இச் சுற்றுப்போட்டியில் முதல் செற்றை 25:18 25:19 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர் செற்றில் வெற்றி பெற்று சம்பியனாகியது மெதடிஸ்த பெண்கள் அணி.
இரண்டாம் இடத்தை வல்வை மகளிர் கல்லூரியும் மூன்றாமிடத்தை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் பெற்றன.








