உதைபந்தாட்ட மத்தியஸ்தர் வாள்வீச்சில் படுகாயம்!

0
583 views

இளவாலைப் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில், எஸ்.ஜெயக்குமார் என்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவாலை விளான் சந்தியூடாக, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மத்தியஸ்தரை, பின் தொடர்ந்து வந்த ஒரு குழுவினரே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் உதைபந்தாட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடே மத்தியஸ்தர் மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here