வவுனியா நகரசபையின் 4 வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15-02-2018 அன்று நடை பெற்ற தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி நகரசபை தவிசாளர் பதவி முதல் இரண்டு வருடங்களுக்கு நா.சேனாதிராசாவுக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் த.பராதலிங்கத்துக்கும் ஒதுக்குவது என்று முடிவு அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் நேற்று(18-02-2018) காலை 9 மணியளவில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் மாவட்டக்குழுவின் பெரும்பாண்மையான உறுப்பினர்கள் சேனாதிராசாவுக்கே 4 வருடங்களும் ஒதுக்கபட வேண்டும் என்று கோரியமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி 4 வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராயா தெரிவு செய்யப்பட்டுள்ளார்