வல்வை (UK)பாலாவிற்கு ஜபிசி வானொலியின் சிறந்த கருத்துரைஞர் விருது
லண்டனில் வசித்து வரும் வல்வையை சேர்ந்த திரு. மினாட்சிசுந்தரம் பாலாசுந்தரம் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜபிசி வானொலியின் விழாவில் சிறந்த கருத்துரைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். திரு. பாலா அவர்கள் ஜபிசி வானொலியின் நேரலை நிகழ்ச்சிகளில் சிறந்த முறையில் கருத்துரைப்பார். வாசகர்கள் அளித்த வாக்குக்கள் மூலமே வெற்றி பெற்று இவர் இந்த விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. விருதினை ஜபிசி நிறுவனத்தின் தலைவர் திரு.பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்













