நாதஸ்வர வித்துவான் கோவிந்தராஜன் 12.09.2015 (சனிக்கிழமை) காலமானார். இவர் வல்வையின் பல்வேறு ஆலயங்களின் ஆஸ்தான வித்துவான் ஆவார். இவர் நாதஸ்வரக் கலையில் 40 வருட அனுபவம் வாய்ந்தவர் ஆவார். வல்வையில் நாதஸ்வரக் கலையில் அன்னாரிற்கு தனிச்சிறப்பு உண்டு. அன்னாரின் தகனக்கிரியைகள் இன்று காலை காட்டுப்புலம் இந்துமயானத்தில் இடம்பெற்றது.








