மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்தமாக ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் கரப்பாந்தாட்ட சுற்றுப்போட்டி 23.08 2023 அன்று வல்வை ஒற்றுமை மைதானத்தில் ஆரம்பமாகியது.
அதன்படி நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தீருவில் அணியை வெற்றி கொண்டு அதன் பிறகு அரையிறுதி ஆட்டத்தில் வல்வை ஒற்றுமை அணியை வெற்றிகொண்டு இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
அதே போல் உதயசூரியன் கழகம் முதலில் ரேவடி அணியை வெற்றி கொண்டு அரையிறுதி ஆட்டத்தில் இளங்கதிர் அணியை வெற்றி கொண்டு அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது!
நடைபெற்ற இறுதியாட்டத்தில் நேதாஜி அணியை எதிர்த்து உதயசூரியன் அணி போட்டியிட்டது! இவ் இறுதியாட்டத்தில் சம்பியனாகியது நேதாஜி அணி!
இரண்டாம் இடத்தைப் பெற்றது உதயசூரியன் கழகம்.







