வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்ட மாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியொன்றினை நடாத்தி வருகின்றது..அந்த வகையில் கடந்த 31/05/2022 அன்று லீக் ஆட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அந்தவகையில் இன்றைய தினம் (05 /06/2022) இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் யாழ்மாவட்டத்தின் பலம் பொருந்திய அணிகளான மயிலங்காடு ஞானமுருகன் (யாழ்) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து பலாலி விண்மீன் (பரு ) விளையாட்டுக்கழகமானது மோதியது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமானது 3 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று லீக் சுற்றின் முதலாவது வெற்றியினை பதிவு செய்தது. மயிலங்காடு ஞானமுருகன் அணிசார்பாக வஷின்சன் 2 கோல்களினையும் ,சதீபன் 1 கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.பலாலி வீண்மீன் அணிசார்பாக பெறப்பட்ட ஒரு கோலினையும் நிதுஷன் பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக மயிலங்காடு ஞானமுருகன் அணியின் முன்கள வீரர் சதீபன் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற மயிலங்காடு ஞானமுருகன் அணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் சிறப்பாக செயற்பட்ட பலாலி விண்மீன் அணிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் யாழ்மாவட்டத்தில் பலம் பொருந்திய இரு அணிகளான கரணவாய் கொலின்ஸ் (வட) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வதிரி பொம்மேர்ஸ் (வட) விளையாட்டுக்கழகமானது மோதியது. பரபரப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக்கழகமானது 4 : 0 என்ற கோல்கணக்கில் வெற்றியினை பதிவு செய்தது.. வதிரி பொம்மேர்ஸ் அணிசார்பாக கோபிநாத் 2 கோல்களினையும் உதயராஜ் 1 கோலினையும் பெற்றுக்கொடுத்தார். மற்றைய கோலானது On Goal ஆகும். போட்டியின் ஆட்டநாயகனாக பொம்மேர்ஸ் அணியின் முன்கள வீரர் கோபிநாத் தெரிவுசெய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற வதிரி பொம்மேர்ஸ் அணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் சிறப்பாக செயற்பட்ட கரணவாய் கொலின்ஸ் அணிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்