தீருவில் விளையாட்டுத்திடலில் திடலில் ஆரம்பித்த வீதியோர மரநடுகை தற்போது ரேவடி கடற்கரை வீதியிலிருந்து குச்சம் வரை தொடர்கிறது.
நகரபிதா செல்வேந்திரா தலைமையில் கூடுகள் நிறுவி மரங்கள் நடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ரேவடி கடற்கரை வீதியில் 20 நிழல் தரும் புங்கை மரங்கள் வல்வை மக்களால் நடப்பட்டுள்ளன. தற்போது கனடாவில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் துரைரட்ணம் அவர்கள் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளார்.










