தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இன்று 1,573 பேருக்கு கொரோனா.. 27 பேர் பலி
தமிழ்நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் பெரிய அளவில் அமல்படுத்தப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் சரிந்தபடியே உள்ளது. செப்டம்பர் மாதம் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலைக்கான அறிகுறி இதுவரை ஏற்படவில்லை.








