வடமராட்சி, தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 21.02.2021 நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது 17) சிறுவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெறுள்ளது. மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







